Wednesday 8th of May 2024 03:54:20 PM GMT

LANGUAGE - TAMIL
.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு!

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு!


நடைபெறவுள்ள பொதுத்தேல் பிராசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து அமைச்சின் செயலாளர்கள் அனைவரையும் அவசர கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று (ஜூலை-7) செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

விஷேடமான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE